வால்வே மாயம்!
1. நிஜம்//மாயை
சாதாரணமக
அந்த வீட்டில் அத்தனை விருந்தாளிகள் இருக்க மாட்டார்கள். அன்று பல பேர் வந்த
வண்ணம் இருந்தார்கள். விசாரித்தபின் தான் தெரிந்தது அந்த வீட்டில் வசிக்கும்
சரவணனுக்கு இதய வால்வ் சரியாக இல்லாததால் மறுநாள் surgery க்கு ஏற்பாடு பண்ணி
இருக்கிறார்கள் என்று.
வயது
ஒன்றும் அதிகம் ஆகி விடவில்லை அவனுக்கு. 50 தான் இருக்கும். இப்போதைக்கு emergency
ஒன்றும் இல்லை எனத் தெரிந்தது. இதயம் நன்கு இயங்கும் போதே இந்த surgeryயை
செய்துவிட்டால் வேறு ஏதும் Complications வராமல் தவிர்த்து விடலாம் என்பதால்
selective surgery செய்துவிட தீர்மனித்து விட்டார்கள்.
குழந்தைகள்
– ஒரு பெண், ஒரு ஆண் – இருவருக்கும் மிகவும் பயம், கோபம். பெண் மறுபடியும்
மறுபடியும் சரவணனிடம் சென்று, “அப்பா, ‘திரும்பி வந்துடுவேளோல்யோ அப்பா, இல்லாட்டா
நான் ரொம்ப அப்செட் ஆவே இருப்பேன்’ என்று சொல்லி தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுத வண்ணம் இருந்தாள்.. பிள்ளை
அவ்வளவாக பேச மாட்டான். சரவணனை ஒட்டி ஒட்டி நின்று கொண்டிருந்தான். அப்பாவுடன்
Table Tennis விளையாடினான்; பூங்காவிற்கு அழைத்துப் போய் அவனுடைய cycle
வித்தைகளைக் காண்பித்தான். அவனைப் பொறுத்த வரையில் surgeryக்குப் போவதற்கு முன்பு
எவ்வளவுக்கு எவ்வளவு அவனுடைய அப்பாவுடன் நெருங்கி இருக்க முடியுமோ அத்தனை நேரம்
கூடவே இருந்தான். சரவணனின் மனைவி கொண்டு செலுத்தப்பட்டவள் போல இங்கும் அங்கும்
போய்க்கொண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் கவலையை கூடுமான வரையில் வெளியில்
காண்பிக்காவண்ணம் இருந்தாள். அவளுக்கு நன்றாகவே தெரியும், Surgeryக்குப் பிறகு சரவணன்
வீட்டுக்கு வந்தால் தான் நிச்சயம் என்று.. இரவு பத்து மணி இருக்கும். எல்லோரும்
சீக்கிரமே படுத்து உறங்கி விட்டார்கள். மறுநாள் விடியர்காலையில் Hospitalக்கு போய்
ஆகவேண்டும்.
6
மணி ஆகி விட்டது. ஒவ்வொருவராக எழுந்திருக்க ஆரம்பித்தனர். சரவணனைத் தவிர மற்றவர்
யாவரும் காபி பருகினர். சரவணன், மனைவி, அவனுடைய பெண், அண்ணன், அவனுடைய மாமா
அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர். பிள்ளை ஒரு வித பயத்துடன் மூலையில் நின்று
கொண்டிருந்தான். சரவணன் அவனருகில் சென்று அவனை ஒரு முழு நிமிடத்திற்கு ஆரத்
தழுவிக்கொண்டு “அப்பா சரியாகி சீக்கிரம் வீடு வந்து விடுவேன் நீ cycle ஓட்டுவதைப்
பார்க்கவும், உன்னுடன் கிரிக்கெட், table tennis விளையாடவும், சரியா?” என்று
கேட்டான். அவனும் தலயை ஆட்டி அவனுக்கு விடை கொடுத்தான். அம்மா, மருமான், மருமாள்,
அக்காக்கள் car வரை வந்து வழி அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரி
வந்து சேர 1 மணி நேரம் ஆகியது. இறங்கி, surgeon அறைக்குப் போனதும் nurse வந்து greet பண்ணி
விட்டு doctorஐ அழைத்து வந்தாள். சிரித்த முகத்துடன் வந்த அவர் சரவணனின் மனைவியிடம்
அடுத்தடுத்து நடக்கப்போகும் வேலைகளை நிதானமாக அவளுக்குப் புரியும் வகையில் பட்டியலிட்டுக்
கூறினார். அடுத்த சில நிமிடங்களில் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் மட மடவென
ஆரம்பமாயின. சரவணன் operation theater க்கு செல்ல வேண்டிய நேரம் வந்து
விட்டது. மனைவியிடம் கண்களால் ‘வந்து விடுவேன்’ என்று சொல்லி விடை பெற்றான். அவனுக்கு
கொடுத்திருந்த injection ஏற்கனவே வேலை செய்ய ஆரம்பித்ததை மெதுவாக மூடிக்கொள்ளும்
கண்கள் அவளுக்கு உணர்த்தின. அவன் படுத்திருந்த stretcher அவள் கண்களில் இருந்து
மறையும் வரை காத்திருந்து அங்கிருந்து waiting roomற்கு நடந்து சென்றாள்.
குறைந்தது
3 மணி நேர surgery என்று surgeon கூறி இருந்தார். வெளியில் இருந்த ஒவ்வொருவரும் அவர்கள் சரவணனுடன் செலவழித்த
நேரங்களயும், சம்பவங்களயும் நினைவுகூர்ந்து கொண்டும், காபி குடித்துக்கொண்டும்,
உள்ளே செல்ல மறுத்த உணவுப்பண்டங்களை உண்டுகொண்டும் கடிகாரத்தைக்
கோபித்துக்கொண்டும் அமர்ந்திருந்தனர். அப்போது கையுறைகளையும், தலை மறைப்பையும் கழட்டிக்கொண்டே
அவர்களை நோக்கி சரவணின் மருத்துவர் வந்தார். எல்லோருக்கும் முன்பு சரவணின் மகள் அவரை நோக்கி விரைந்தாள். “சரவணின்
surgery முடிந்து விட்டது. இன்னமும் அவர் முழிக்கவில்லை. விரைவில் அவரை இருதய, நுரையீரல் இயந்திரத்திலிருந்து
விடுவித்து அவருடைய இதயம் தானே இயங்க வைப்போம். இதனை அறிவித்துப்போகத் தான் வந்தேன்” எனக்கூறி நம்பிக்கை
இழக்காமல் இருக்கச் சொன்னார். அவருக்கு அழைப்பு வந்ததால் அவர் உள்ளே விரைந்தார்.
ஒரு
மணி நேரம் கடந்திருக்கும். அப்போது சரவணனின் மனைவியை அழைப்பதாக செவிலியர் கூறியதும்
கவலையுடனும், தயக்கத்துடனும் அவள் மருத்துவர் இருந்த அறையில் நுழைந்தாள். “அமருங்கள்”
என்று கூறிய மருத்துவர், “I am extremely Sorry, Mrs. Saravanan, I do not know
how to deliver this message to you. We failed in our efforts to make his heart take over from
the machine. We couldn’t wean him off from the machine. It is a sudden
development. We could not save him. It is a great loss to you all and I don’t
know how to console you”. “failed” எனும் வார்த்தைக்கு மேல் அவளுக்கு வேறு எதுவும் காதில்
விழவில்லை. அச்சமயத்தில் விஷயம் அறிந்து மற்றவர்களும் அந்த அறைக்குள்
வந்தனர். சரவணின் மகள் கட்டுக்கடங்காத அழுகையிலும், கோபத்திலும் இங்கும்
அங்கும் ஓடினாள். சரவணின் அண்ணன் மட்டும் நிலமையைப் புரிந்துகொண்டு அவளை
நெஞ்சோடு அணைத்து தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
எல்லாம் முடிந்து விட்டது.
இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின. கண்ணாடிப் பெட்டியில் இருந்த அப்பாவை பெண்ணும், பிள்ளையும் கண்கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தனர்.
தகனத்திற்கான நேரம் வந்தது. இறுதியாக ஒரு
முறை சரவணனை அனைவரும் அணைத்து வழி அனுப்பி வைத்தனர்.
ஒரு
மாதம் ஓடிவிட்டது. அவன் மனைவி அலுவலகம் போவதும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும்
தொடங்கி விட்டது. அவர்களைப் பொறுத்தவரை அவன் இல்லாமல் ஆகி விட்டான்!
வால்வே
மாயம்!
2. மாயை / நிஜம்
சரவணன் வீட்டிற்குப் போக மிக்க ஆவலாக
இருந்தான். அவன் சட்டை அணியும் முன் அவன் முதுகில் பெரிய அளவில் சூடுபோட்டாற்போல்
இரண்டு வடு இருந்தது. என்னவென்று விசாரித்ததில், அவனுடைய இருதையத்தையும்,
நுரையீரலையும் தானாக இயங்க வைக்க அவர்கள் மின்சார அதிர்வு கொடுக்க வேண்டி
இருந்ததாம், இவை அதனால் ஏற்பட்ட வடு எனத் தெரிந்தது. ஒரு வழியாக
அத்தகைய நிலையிலிருந்து மீண்டு வந்ததற்கு அவன் இறைவனுக்கு மானசீகமாக நன்றி
சொன்னான்.
சரவணன் இன்னும் 3 மாதங்களுக்குத்
தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு அதன் பின் தான் வேலைக்குப் போக வேண்டும். அவன் மனைவிக்கு
அவன் வீடு திரும்பியதில் பெரிய நிம்மதி. அவன் பெண் வெகு குதூகலமாக இருந்தாள். அவன் மனைவி
ஏகப்பட்ட சிசுருஷைகள் செய்தாள். ICU விலிருந்து வெளி வந்தபின் அவனை 4 நாட்களுக்கு சின்ன சின்ன
அசைவுகளுக்குப் பழக்கி வீட்டிற்கு அனுப்பினார்கள். அவனைக் குளிப்பாட்டுவதும், உணவு
ஊட்டிவிடுவதும், மெதுவாக நடக்க அழைத்துப்போவதுமாக அவன் மனைவி அவனைச் சுற்றி
இயங்கிக் கொண்டிருந்தாள்.
இத்தகைய இடைவிடாத கவனிப்பினால் அவன்
இரண்டு மாதங்களிலேயே எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டான். 3 மாதங்களில்
அவர்களது வாழ்க்கை ஒரு roller coaster பயணம் போல் அமைந்து விட்டது.
தான் அறுவை சிகிச்சையிலிருந்து
பிழைத்து வருவோமா என்ற ஐயம் அவனுக்கு இருந்தது. யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை.
ஆசை மனைவி, அன்புக்குழந்தைகள், வயதான அம்மா, பிரியமான அண்ணா, தம்பி, அக்கா,
இன்னும் பிற உறவினரைப் மறுபடியும் பார்ப்போமா என்ற பெரிய சந்தேகம் அவனுக்கு
இருந்தது. தன்னை நல்லபடியாக கவனித்து, அந்த வால்வைப் பழுது பார்த்த
மருத்துவருக்கு மானசீகமாக நன்றி சொன்னான்.
இன்றுடன் அந்த valve repair முடிந்து
10 வருடங்கள் ஆகி விட்டது. இந்த கால கட்டத்தில் எத்தனை நிகழ்வுகள்! மனைவி வேலயில்
மிகுந்த ஈடுபாட்டுடன் பாடுபட்டு உயர் பதவி வகிக்கிறாள். பெண் மருத்துவப்
படிப்பை முடித்துவிட்டு இப்போது Heart and Lung சம்பந்தப் பட்ட படிப்பில்
specialize செய்தபின் அவனுக்கு சிகிச்சை நடந்த இடத்திலேயே surgeon ஆகப்
பணிபுரிகிறாள். போன வருடம் தான் அவளுக்குப் பிடித்தமான ஒருவரை எல்லோருக்கும்
அறிமுகம் செய்து அவர்கள் ஒருவரை ஒருவர் மனதார விரும்புவதாகச் சொன்னாள். பிள்ளை, நிதி
நிர்வகத்தில் மேற்படிப்பு படித்து ஒரு வங்கியில் மேலதிகாரியாகப் பணி புரிகிறான்.
சரவணன் முன்பு வேலை பார்த்த
அலுவலகத்திலேயே தொடர்ந்து 3 ஆண்டுகள் வேலை பார்த்த பின் சொந்தமாக ஒரு consulting
company ஐத் தொடங்கினான். அவனும் மனைவியுமாக உலகின் பல நாடுகளுக்கும் வருடா வருடம்
பயணிக்க ஆரம்பித்தார்கள். இருவருக்குமே வெளிநாட்டுப் பயணம் மிகுந்த பிடித்த விஷயம்.
சமீபகாலத்தில், சரவணன் வேலையில்
இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு தனக்கு மனதிற்கு பிடித்த செயல்களில்
ஈடுபடுத்திக்கொள்கிறான். அப்படித் தோன்றியதுதான் ‘துணை’.
‘துணை’ அமைப்பின் மூலம்,
முதியோர்களுக்கு பல சேவைகளைத் தொடங்கி உள்ளான். முதலாவதாக அவனுடைய குடும்பத்திலேயே பல முதியவர்கள் தனித்து
விடப்பட்டு விட்டனர். அவர்களது பிள்ளைகளும், பெண்களும், வேலை நிமித்தமாகவும்,
மேற்படிப்பின் பொருட்டும் வெளி நாடு சென்று விட்டனர். அவர்களது
இன்றியமையாத தேவைகள் – வீடு அமைத்துக் கொடுப்பது, அவர்களது பயண ஏற்பாடுகளை
கவனித்துக் கொள்வது, அவர்களது மருத்துவத் தேவைகளை கவனித்துக்கொள்வது, அவர்களது
பொழுது போக்கு அம்சங்களைப் பூர்த்தி செய்வது போன்று இன்னும் பிற—பொதுவாக அவர்களது
கடைசி phase of Lifeஐக் கூடுமானவரையில் மகிழ்ச்சிகரமானதாக ஆக்க முயற்சி
எடுத்துக்கொள்ளுகிறான். இதில் அவன் மிகுந்த ஈடுபாட்டுடனும், விரும்பியும் காரியங்களைச்
செய்கிறான். அவனுக்கு கொடுக்கப் பட்ட மறுஜென்மத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள
முயற்சி செய்கிறான். அவனுக்கு இது பிடித்திருக்கிறது. அவன் உடல்
நிலையும் இதற்கு ஈடு கொடுக்கிறது. அவனுக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதியம் அவனுடைய தற்போதைய
தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கிறது.
கடந்த சில நாட்களாக அவன் மிகுந்த
உற்சாகத்தில் இருக்கிறான். அவனுடைய பெண் மணமுடிக்க தீர்மானம் செய்து அதற்கான தேதியும்
குறித்துவிட்டாள். முழு ஏற்பாட்டையும் அவளும், மாப்பிள்ளையுமாகவே
பார்த்துக்கொள்கிறார்கள். அவனும் மனைவியும் விருந்தினர்போல் சென்று வந்தால் போதும். அதற்கு அவர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில்
அவர்களது மகனும் அவனுடைய வருங்கால மனைவியை அவர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டான். அவர்களுக்கு
அதில் ஏக மகிழ்ச்சி.
சரவணன் மறுபடியும் ஒரு கணம் அந்த
surgeryயை யோசித்துப் பார்த்தான். ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தால்… அந்த
நினைப்பையும் அந்த யோசனையையும் அந்தக்கணமே தன் நினைவிலிருந்து நீக்கினான்.
தற்சமயம் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும்
வாழ்க்கை அவனுக்கு சொர்க்கமாய்த் தெரிகிறது.
வால்வே
மாயம்!
3. நிஜம்//மாயை
அந்தக் கல்யாண மண்டபமே அல்லோலகல்லோலப்
பட்டுக் கொண்டிருந்தது. முதலில் சரவணனின் மகள் ஒரு கடற்புற புராதன மாளிகையில்
மட்டும் அவளது விவாகத்தை ஏற்பாடு செய்திருந்தாள். அப்போது அவள் தாயார் அவளுக்கு சரவணன் அவளது சம்பிரதாய
திருமணத்தை ஒரு கோவில் வளாகத்தில் செய்யவேண்டும் என்று கூறியதை நினைவு கூறினாள். அதனால் இந்த
ஏற்பாடு. பூ, பழம், மாலை, பட்டுப் புடவைகள், குற்றுவிளக்கு, மணமேடை
அலங்காரம் என சகலமும் சரவணனுக்குப் பிடித்தாற்போல் அமைக்கப் பட்டிருந்தது.
அந்த மணமேடையில் சரவணண் இயல்பாக
சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் பிரதான இடத்திலிருந்து அவனுடைய ஆசை மகளை
கன்னிகாதானம் செய்யத் தயாராக இருந்தது.
--------குமார் சின்னம்பி
செப்டெம்பெர் 28, 2013
No comments:
Post a Comment