Saturday, May 14, 2016


கல்



காவிரிக்கரையில் படிக்கட்டில் அமர்ந்து ஓரிரு கூழாங்கற்களை ஓடும் நீரில் மெதுவாக வீசினான்  மாதவன்.

'ப்ளக்'கென்று  சத்தத்துடன் நீரில் அமிழ்ந்து போனது கல். சீரான  நீரோட்டத்தின் சளசளப்பில்,   இந்தகல்லின்  ஒலி ஒரு இதமான தாளமமைத்தது.   தூரத்தில் ஏங்கிக் கூவிய  குயிலுக்கு, எதிர்ப் பாட்டு கொடுத்தது  பேடை.

சாயும் செவ்வானம்,  மெல்ல வீசும் காற்று என்ற எதுவும் மாறவில்லை இந்த கிராமத்தில்.

நேற்றுதான் கல்கட்டாவிலிருந்து வந்திறங்கினான்,   கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் பிறகு.

இதேபோன்ற பல சாயும்  வேளைகளில்,   இதே படித்துறையில் பல கற்கள்  நீரில் விழுந்திருக்கும்.   கூடவே நீரில் காலைவிட்டபடி   சிரித்துக் கொண்டே  பேசுவாள் பானு.  அவளுக்கு மட்டும் வரும் கலை,   அந்த பேச்சும் நகையும் இழையும் கலகலப்பு.   மாதவனுக்கு அதை அநுபவிப்பதில் அலாதி பிரியம்.

"ஏண்டா மாது,   இத்தனைப் பேச்சுக்கும் வெறும் உம் உம் தானா?"  பானுவின் கிண்டலுக்கு இன்னொரு  உம்தான் பதில்.      கலகலத்த சிரிப்புடன்,  "உம் உம் உம்மணாம் மூஞ்சி"    என்பாள்.  அவனுக்கு அவள் எது சொன்னால் சந்தோஷம்தான்.       இன்னும் இன்னும் என்று இருட்டும் வரை  நேரம் ஓடிவிடும்.

இருபது வருஷங்களில் காலச்சக்கரம் எத்தனையோ அலைக்கழித்த பின்னும், இப்போதும் நினைவில் பசுமையாயிருக்கும் சந்தோஷமிது.

பூவைப் போலத் தளிர் கரங்கள் கண்களை மெத்தென மூடின,  அதே கலகலச்சிரிப்புடன்.

"கனவே, கலையாதே!" என்ற நினைப்பிற்கு முற்றுப்புள்ளி  வைத்தது "என்ன மறந்துட்டியோ?"
என்ற பானுவின் குரல். ஆச்சரியத்துடன் திரும்பினால்,  அதே பாவாடை தாவணியில்  பதினாறு வயது பானு நின்றிருந்தாள்.

எப்படி இருபது வருஷங்களுக்கு பின்னிருந்த பானு வரமுடியும் என்றகேள்விக்கு பதில்,   சிரித்தபடி  "என்னடா நம்ப முடிந்ததா?   என் மகள் ஷீலா என்னை மாறியே இருக்காளா?"   என்றபடி  மேல் படியிலிருந்து  இறங்கி அருகில் அமர்ந்தாள் பானு.

மாதுவின்  இன்னொரு கல்  காவிரியில் கலந்து, அந்த சப்தம்  அதை ஆமோதித்தது.
கூடுதுறை - பவானி, காவிரி, சரஸ்வதி மூன்றும் கூடும் துறை.

நிலவொளியில் ஆர்ப்பரிப்பு எதுவும் இல்லாமல் அமைதியாய் அலைபாய்ந்து கொண்டிருந்தது காவிரியா, பவானியா என பிரித்துக்கூற முடியவில்லை. பின்புலத்தில் சங்கமேஸ்வரரும், வேதநாயகியும் ஆட்சி புரியும் பவானி கோயில். அந்த கோபுரத்தின் அழகை வானத்தில் இருந்து கொண்டே தனதாக்கிக் கொண்டிருந்தது  பேராசை பிடித்த அந்த நிலவு!

அந்தக் கோயிலும், அதன்  சுற்றுப்புறமும், கூடுதுறையும் அமைதியாலேயே செதுக்கப்பட்ட தோற்றத்தைக் கொடுத்தது! இயற்கையின் இந்த அழகினை ரசிப்பதற்காகவே வேதநாயகி தனது தமையன் விஷ்ணுவையும், மதனி சௌந்தரவல்லியையும் தன் அருகிலேயே அந்தக் கோவிலிலேயே தக்க வைத்துக்கொண்டாள் போலும். அந்தக் கோயிலின் விரிந்த வளாகத்தில் ஓங்கி வளர்ந்திருந்த இலந்தை மரம் 'நான் தான் ஸ்தல விருட்சம்' என மமதையுடன் பறைசாற்றிக்கொண்டிருந்தது.

திருமணங்கள் வில்லங்கம் எதுவும் இல்லாமல் நடப்பதற்கும், குழந்தைப்பேறு  ஏற்படுவதற்கும்
பல்லாயிரக்கணக்கானோர் இந்தியா முழுவதிலிருந்தும் வந்து வழிபடும் தலத்தின் பவானி ஆற்றங்கரையிலமர்ந்து உருண்டு சென்ற 20 வருடங்களின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர் கூடுதுறையில் கூடிய இந்த மூவரும்.

அம்மா பானுவின் spontaneous உற்சாகம், மாதவனுடனான அந்நியோன்னியம் இரண்டும் ஷீலாவிற்கு மாது ஒரு person of interest/importance என புரிய வைத்தது.

1986: சங்கரி தெரு, பவானி

பால் காரர் ஒருவர் தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு  தன் எருமை மாட்டை மேய்த்துக்கொண்டு, வேப்பங்குச்சியால் பல்லையும் தேய்த்துக்கொண்டு அந்தத் தெருவில் ஒரு வீட்டின் முன் பால் கறக்கச் சென்று கொண்டிருந்தார். கோவிலிலிருந்து திருஞான சம்பந்தர் எழுதிய தேவாரத்திலிருந்து அந்தக் கோவிலின் ஓதுவார் உச்ச ஸ்தாயியில் பாடியது அந்த ஊர் முழுவதும்
கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அருகிலிருந்த வீட்டின் தாழ்ப்பாளும், மேல் கொக்கியும் திறக்கப்படும் சப்தம் கேட்டு பால் காரர் இத்தனை அதிகாலையில் யார் எழுந்திருப்பார்கள் என திரும்பிப்பார்த்தார்.

ஈரத்துணி முடிந்த தலையுடனும், கையில் கோலப்பொடியுடனும், ஒருபுறம் தூக்கி இடுப்பில் சொருகிய பாவாடையுடன் தாவணி தலைப்பை முடிந்து, நெற்றியில் இட்ட கருப்பு சாந்துப் பொட்டு மணக்க* கண்ணாடி வளைகள் குலுங்க, மெல்லிய தங்க சங்கிலி கழுத்தில் மிளிர  பளிச்சென்ற தோற்றத்துடன் பானு மகிழ்ச்சிப் பரவசத்துடன் வீதியில் அமர்ந்து கோலம் போட ஆயத்தமானாள்.

( *அரிசி மாவை வரட்டு இலுப்பச்செட்டியில் ஒரு கையளவு இடவும்.நன்கு கருகும் வரை கை விடாமல் ஒருபுறம் இடுக்கியால் பிடித்துக்கொண்டு, கருகிய பிறகு அந்த மாவு முங்கும் வரையில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இரண்டு முட்டை நல்லெண்ணையை விட்டு கெட்டியாகும் வரையில் கொதிக்கவிட்டு நல்ல பதத்திற்கு வந்த பின் மிதமான சூட்டுடன் இதற்கெனவே  முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து வெளிப்பறம் முழுவதும் பிசிர் இல்லாமல் சுத்தம் செய்து விளிம்புகளை சமமாக்கி வெளிப்புறத்தை வழுவழுப்பாக்கி தயாரிக்கப்பட்ட கொட்டாங்குச்சியில் சிந்தாமல் ஊற்றி உறைய விட வேண்டும். உறைந்தபின் எண்ணையின் பளபளப்புடன் மிளிறும். கிட்ட தட்ட இரண்டு முதல் மூன்று நாட்களில் உறைந்துவிடும். பானுவிற்கு கருப்பு சாந்து தயார்!).

"என்ன தாயி, இம்புட்டு சுருக்க எந்திரிச்சுட்ட, வெளியூரு எங்காச்சும் போறீகளா?"

"இல்ல மாரி, முழிப்பு வந்திரிச்சு, அதேன். இன்றைக்கு கூடுதலா ஒரு ஆழாக்கு பாலு கெடைக்குமா, நிரம்ப தண்ணிய ஊத்தி குடுத்திடாத, பாயசம் வைக்கணும்" என்றாள் பானு.

மாரி, உடனே,"ஏன் தாயி நீ வேற, நான் எப்ப உனக்கு தண்ணி பாலை குடுத்திருக்கேன், கள்ளி சொட்டு மாதிரி பால் குடுக்கையிலேயே இப்புடி சொல்றியே தாயி" என்று சலித்துக்கொண்டே நீர் நிறைந்த தன் ஜோட்தவலையை மறைத்துக் கொண்டார்.

பானு, தன் அப்போதைய மன நிலையை பிரதி பலிக்கும் வகையில் தினம் போடும் கோலத்தைவிட பெரியதாகவும், நிறைய புள்ளிகளை இணைத்தும், நேர்த்தியாகவும் பின்னி செம்மண் இட்டு அழகு சேர்த்தாள். அவள் செயலில் ஆர்வமும், அவசரமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன். விழிகள் யார் வரவையோ எதிர் பார்த்து நிலை கொள்ளாமல் தவித்தன.

பனி மூட்டத்தில் மூழ்கியிருந்த காலை வேளையில் தேவாரப் பாடலுக்குப் பின்னணி போல் 'சல் சல' என்ற சத்தத்துடன் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வெள்ளை மாடு பூட்டிய வண்டி ஒன்று கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது. அன்றைக்கு கிடைத்த சாணத்தை கோலத்தின் நடுவில் வைத்து அன்றலர்ந்த மஞ்சள் நிற ஊமத்தைப் பூவை அதில் சொருகி வைத்துவிட்டு எழுந்து நின்றாள் பானு. அவளுடைய கைவண்ணத்திற்கு முதல் பாராட்டாக 'நல்லா எழுதிட்ட தாயி, மவராசியா இரு' என வாயார வாழ்த்தினான் மாரி. பானு, 'ரொம்ப நன்றி, மாரி' என அவனது வாழ்த்தை ஏற்றுக் கொண்டாள்.

அதே சமயத்தில் எதிர்த்த வீட்டி வாயிலில் மாட்டு வண்டி வந்து நின்றது. மாடு ஓட்டி வந்த  பாண்டி 'இதா வந்திட்டேன் மாதவா' நான் சாமானை எறக்கித் தாரேன்' என சொல்லியவாறே வண்டியின் பின்புறம் சென்றான். மடித்துவிட்ட முழுக்கை சட்டையும், கலைந்த தலையும், கருப்பு நிற pant உடன் மாதவன் இறங்கினான். பாண்டிக்கு தன் purseஐத் திறந்து 10 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான். உடனே பாண்டி 'என்னா மாதவா, என்னிக்கு நான் உங்கிட்ட வண்டி சத்தம் வாங்கிக்குறேன், இப்படி இன்ஷல்ட் பண்றியேம்மா' என்று சொல்லி அதை வாங்கி மறுத்தான். ஒரே பள்ளியில் படித்த நட்பு. 'சாயங்காலம் ஆத்தங்கரையாண்ட வா, பேசுவோம்' எனச் சொல்லி அவன் காளையை பத்த ஆரம்பித்தான்.

அப்போது தான் மாது பானுவைப் பார்த்தான். 'என்ன பானூ? இவ்வளவு சீக்கிரம் எழுந்து ஏக சுறுசுறுப்பாயிட்ட' என்று கேட்டான்.

'நீ இன்றைக்கு திரும்பி வரப்போறேன்னு தெரிஞ்சதால ராப்பூரா கொட்ட கொட்ட முழிச்சிண்டிருந்தேன்டா. உனக்காக special கோலம் போட்டிருக்கேன் பாரு. சரி, சரி
வீட்டுக்குப்போ, காபி போட்டுக் கொண்டு வரேன்' என்ற வாறே அவனது பதிலுக்குக் காத்திராமல் அவள் வீட்டினுள் சென்றாள். மாதுவும் அவனது பெட்டியை அவன் வீட்டினுள்ளே எடுத்துச் சென்றான்.

பெட்டியை ஓரம் வைத்துவிட்டு கைகால் அலம்பி வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தான் மாது. கைவைத்த பனியன் மேல் போட்டிருந்த அருவிக்கரை துண்டினால் முகத்தைத்துடைத்தவாறே வாசலை நோக்கி பானுவையும் காபியையும் எதிர் நோக்கி இருந்தான்.

பானு வந்து டபராவையும் காபி நிறைந்த டம்ளரையும் நீட்டினாள். அவன் காபி குடிக்க அவகாசம் கொடுத்தபின் "போன காரியம் என்னாயிற்று' என கேட்டாள். "ஒரு நாள் பூரா interview' நடந்தது பானு. Surprisingly, அன்றைக்கு சாயங்காலமே மூணு உயர் அதிகாரிகள் வந்து 'congratulations, we are happy to offer you the Inventory Control Manager position' அப்படீன்னு சொல்லி அடுத்த மாசமே பொறுப்பேற்றுக்கொள்ள சொன்னாங்க நானும் சம்மதிச்சுட்டேன்".

Congratulations மாது. நான் உன்னை ரொம்ப miss பண்ணுவேன். ஆனா நீ இப்ப உன்னோட வயசான அம்மாவோட இருக்கறது அவசியம். உங்க அப்பா ரெண்டு வருஷம் முன்னாடி போனவுடனேயே உங்கம்மா தனியா diabetes ஓட தவிச்சிண்டிருக்கற தம்பியோட இருக்கேன்னு சொல்லி Calcutta போயிட்டா. உன்னையும் ஒரு வேலையைப்பாத்துண்டு அங்க வந்து சேருன்னு சொல்லிட்டுப்போயிட்டா. இப்பத்தான் அது கை கூடி வந்திருக்கு".

"நீ எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்துண்டு வந்திருக்க பானு. உன்னைப்பிரிஞ்சு போறது ரொம்ப கடினமா இருக்கு பானு".

"மாது, உன்னுடனான நட்பு விலை மதிக்க முடியாதது. எல்லா நட்பும் காதலிலும் கல்யாணத்திலும் முடியணும்ங்கறது கட்டாயமா என்ன? மேலும் நம்ப சமூகத்துல வயசு வித்தியாசம் - நான் உன்னை விட வயசுல பெரியவங்கறது- என்னையுமறியாமலே- தன்னிச்சையாவே நட்பைக்கடந்து வேற மாதிரி யோசிக்க 144 போட்டுடுத்துன்னு நினைக்கிறேன். உன் குடும்ப நிலைமை, பொருளாதாரம் இவற்றை மனதில் கொண்டு இந்த மாதிரியான ஒரு பிரிவு வரும், தவிர்க்க இயலாதுங்கறதை உணர்ந்து நானும் மனத்தை பக்குவப்படுத்திண்டுட்டேன். எனக்கும் வரன் வந்துண்டிருக்கு. என்னை நிரம்பப் பிடித்ததாகச்சொல்லி ஒருத்தர் சொல்லிவிட்டிருக்கார் அப்பாவிற்கு. அவர் இந்த ஊர்லயே Dy Collector ஆ இருக்காராம். சின்ன வயசுலயே இந்தியால பல States ல நல்ல பதவில இருந்துட்டு பவானில posting ஆகி வந்திருக்காராம். கோவில் குருக்கள் மூலமா கேள்விப்பட்டு அவர் வீட்டிலேருந்து அப்பாக்கு கேட்டு அனுப்பி இருக்கா. நீ ஊருக்குப்போயிருந்த வாரம் வந்து பாத்துட்டுப் போனா. ரொம்ப informal ஆன சந்திப்பு. நானும் சம்மத்த்தை சொல்லிட்டதால அப்பா ஜாதகம் பாத்துட்டு அவாளுக்கு சொல்லிட்டு வர தை ல கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொன்னார். இது தான் என்னோட கதை" ன்னு சொல்லி ல கல ன்னு சிரிச்சா.

" இவளால எப்படி இப்படி தாமரை எலை தண்ணி போல பட்டும்படாம இருக்க முடியறது? நிஜமாவே இவ இந்த நடப்புகளை அப்படியே இவ்வளவு சுலபமா ஏத்துண்டுட்டாளா? துடுப்பில்லாத  ஓடம் போல வாழ்க்கை அலை இழுத்த இழுப்புக்கெல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கற இந்த மனப்பக்குவம் இவளுக்கு எப்படி வந்தது". அவன் மனசு அவனைக் கடிந்து கொள்ள ஆரம்பித்தது "ஆமாம், நீயோ 'சொல்லத்தான் நினைக்கிறேன்'சிவகுமார் மாதிரி உன் மனசுல இருக்கறதைப் போட்டு உடைக்க துணிவில்லாமல் இருக்க. அவளானும் அடுத்து நடக்க வேண்டியதைப் பார்க்கட்டும்".

"சரி மாது. உன்னோட அடுத்த steps என்ன. Packing, வீட்டை காலி பண்றது எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கறேன், நீ வெளி வேலைகளைப் பாரு. ரெண்டு வாரம் ஓடிப்போயிடும்.

நீ rest எடுத்துக்கோ. எனக்கும், அப்பாக்கும், உனக்கும் இன்னைக்கு mess சாப்பாடே சொல்லிடறேன் மதியத்துக்கு. நீ குளிச்சிட்டு சாப்பிட வா".


மாது train ஏறி கல்கத்தா போறான். Sahu Jain mills சணல் தொழிற்சாலை சேர்றான். AICWA பாஸ் பண்ணி production manager ஆகிறான். Finance இவன் பொறுப்பாறது. அப்ப அவன் கம்பெனி loans and advances ல தகராறு வரது. அதை சரி செய்ய HSBC Bank divisional officeஓட நிறைய நாட்கள் negotiate பண்றான்.

அப்ப DGM Advances சாவித்திரி பரிச்சயமாறா.
சாவித்திரி: 28. சந்தேரி saree. கண்ணாடி. கட்டின கை. Polite but Firm பேச்சு.

மாது இன்னும் பல நாட்களுக்கு negotiate பண்ண முடிவெடுத்தான்!

மாது இன்னைக்கு bank inspectionக்காக சீக்கிரமே கிளம்பி போயிட்டான். Inventory தங்கி போச்சு. சம்பளம் குடுக்கணும், raw materialக்கு payment overdue, working capital உதைக்கறது... இது எல்லாத்துக்கும் stock hypothecate பண்ணிதான் advance clear பண்ணி ஆகணும். HSBC Bankலேருந்து verificationக்கு managers வந்திடுவாங்க். அவனோட honda city sahu jain godown வாசல்ல வந்து நின்றது.

பின்னாலயே white Tata sumo வந்து நின்னது. அதலேருந்து மாது எதிர் பார்த்தா மாதிரி சாவித்திரி fileஉம் கையுமா இறங்கினா. Sun glasses, கத்வால் saree, printed blouse. மாது, கொஞ்ச நேரம் loan, சணல், எல்லாத்தையும் மறந்துட்டான். Ordinary கத்வால் saree இத்தனை அழகா இருக்குமா.?அந்த gold strap watch brown armல நகர்ந்து அத்துமீறிண்டிருந்தது.  Sun glasses மேல படர்ந்திண்டிருந்த கேசம் அவளோட கண்களைப் பார்க்க துடிச்சிண்டிருந்தது. கருக மணி chainஉம், lip gloss உம், neutral color நகப் பூச்சும் அவளது இயற்கையான அழகுக்கு அளவா அழகு சேர்த்திண்டிருந்தது.

"என்ன மாதவன், late ஆ வந்துட்டேனா. வர வழில as usual Writers building வாசல்ல சிகப்பு கொடி புடிச்சிண்டு ஏக கூட்டம். அதான்."

மாது இன்னும் பேச ready ஆகலை. ஆக முடியலை! 'கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்" ங்கற பாட்டு apt ஆ இருந்திருக்கும் இந்த இடத்துல. இந்த dereliction of duty மாதுக்கு ரொம்ப புடிச்சிணருந்தது. சுதாரிச்சிண்டு, 'வாங்க சாவித்திரி, உங்களை இவ்வளவு தூரம் அலைக்கழிச்சதற்கு ரொம்ப sorry".

"பரவால்ல மாதவன், உங்களை மறுபடியும் இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன்னு நினைக்கலை. Pleasant surprise!"

இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டே godown நோக்கி நகர்ந்தார்கள்.


Inspection வேலை முடிஞ்சது. சாவித்ரி பண்ணவேண்டிய வேலைகளை systematic ஆ முடிச்சா. 1 மணில வேலை முடிஞ்சுடுத்து. இருவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

"சாவித்ரி, வேலையை நான் எதிர்பார்த்ததைவிட ரொம்ப சீக்கிரம் முடிச்சிட்டீங்க. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா போற வழியில lunch சாப்டுட்டு போகலாமா".

நானே உங்களை கேட்கணும்னு இருந்தேன் மாதவன், நிச்சயமா போவோம். எங்க போகலாம்.

"எனக்கு Calcutta Cricket Club membership உண்டு. அங்க போகலாமா. உங்களுக்கு food preferences ஏதேனும் உண்டா?"

"Mainly vegetarian. கல்கத்தால settleஆனதும் sea foodக்கு பழகிண்டேன். I love cricket club. எங்க bank party அங்க நடக்கும். கல்கத்தாலயே ரொம்ப பிடித்த இடம். அங்கேயே  போவோம்".

"எனக்கு membership இருக்கே ஒழிய போக நேரம்இல்லை, companyயும் இல்ல. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திண்டு இன்னிக்குப்போவோம். உங்களை அந்த main entrance கிட்ட இருக்கற car park meet பண்றேன்னு" சொல்லி குதூகலத்தோட அவன் காரில் ஏறினான்.

அவளும் அவள் காரில் ஏறி start செய்ததும், "என்ன மாயம் நீ செய்தாய், என் இதயத்தைத் திருடி விட்டாய்" என அவள் மன நிலைமையை பிரதிபலிக்கறா மாதிரி பாடல் வரிகளை மாற்றிப் பாடிப் பார்த்தாள். காரோட sun shade mirrorல அவளை ஒரு முறை பாத்துண்டா. எப்பவும் விட அவளே அவளுக்கு இன்னும் அழகாத் தெரிஞ்சா. புத்துணர்ச்சியோட மாதுவின் காரை follow பண்ண ஆரம்பிச்சா.

காரிலிருந்து இறங்கும் முன் தன்னுடைய Blue blazerஐ அணிந்து கொண்டு சாவித்ரியின் வருகைக்காக காத்திருந்தான். அவள் காரிலிருந்து இறங்கி வந்து அவனுடைய attireஐப் பார்த்து தானும் கையில் வைத்திருந்த Kashmere shawlஐ சுருக்கம் இல்லாமல் போர்த்திக் கொண்டாள். அந்த குளுகுளு மதியத்திற்கு இவை அவசியமாய் இருந்தன. உள்ளே நுழைந்ததுமே அவர்களை வரவேற்று இருக்கையில் அமர அழைத்துச் சென்றார் சீருடை அணிந்து உயரமான தொப்பி அணிந்திருந்த waiter. அவளுக்கு waiter இன் தொப்பியில் இருந்த ஜரிகை வேலைப்பாடு மிகவும் பிடித்திருந்தது.

குடிப்பதற்கு இருவரும் இளநீர் கேட்டனுப்பிவிட்டு நீண்ட அகலமான menu cardஐ பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களது மனம் menu cardல் இல்லை. இருவருக்கும் அந்த நெருக்கம் பிடித்திருந்தது. அவர்கள் முன் வியாபித்திருந்த பச்சைப்பசேலென சீராக வெட்டப்பட்டிருந்த புல்வெளி பிடித்திருந்தது. அந்த shamiana மேலமர்ந்தும், பறந்தும் சிட்டுக்குருவிகள் அவர்களுக்கு இசை அமைத்துக்கொண்டிருந்தன. அவனை அவள் பார்ப்பதையும் அவளை அவன் பார்ப்பதையும் ஒதுங்கி நின்று waiter பார்த்துக் கொண்டிருந்தார். சுதாரித்துக் கொண்டு இருவரும் தக்காளி சூப்பும், mulligatawny சூப்பும் order செய்தனர்.

"இந்த சுகந்தமான காற்றும், இயற்கையின் வனப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உண்மையை சொல்லப்போனால் இந்த சமயத்துல இந்த சூழ்நிலைல நீங்க என்னோட இருக்கறது ரொம்பவே பிடிச்சிருக்கு."

இதைக்கேட்டதும் சாவித்ரியின் முகத்தில் எங்கிருந்தோ இயற்கை Max Factorன் வேலையை எடுத்துக்கொண்டு சரியான வண்ணத்தில் கலவையைச் சேர்த்து pink வண்ணத்தை அப்பியது. Spontaneous ஆக அவளது விரல்கள் அத்தகைய நாணத்தின் ஆக்கிரமிப்பை எதர்கொள்ள அவனது விரலைத் தேடி இறுகப் பற்றியது. குளமாகிக் கொண்டிருந்த அவளது கண்கள் மெல்லிய புன்னகையுடன் அவனை நோக்கியது அவளுக்கும் அதே உணர்ச்சி இருப்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்லியது.

அன்றைய சூப்பில் உப்பு, காரம், புளிப்பு எது இருந்ததோ தெரியவில்லை. பிறகு வந்த main courseஉம் பார்வைகளாலும், அர்த்தமற்ற சிரிப்புகளாலும், ஆசை வார்த்தைகளாலும் முக்கியத்துவம் இழந்தன. அது என்னவோ தெரியவில்லை கடைசியாக வந்த ரசகுல்லாவின் இனிப்பு மட்டும் அவர்கள் உதடுகளைவிட்டு நீங்கவில்லை. பிரிய மனமில்லாமல் இருவரும் இருக்கையைவிட்டு எழுந்து parking lot நோக்கி நகர ஆரம்பித்தனர்.  Waiters அவர்கள் கைகள் பிணைந்திருந்ததை கவனிக்கத் தவரவில்லை!

முதல் முறையாக அவர்களது personal phone numbers பரிமாற்றம் நடந்தது. சாவித்ரியை அவளது car வரை நடத்திச்சென்று அவளது shawl மேல் பொறாமையாக பார்வையிட்டு அவளை வழியனுப்பி வைத்தான்.

திரைச்சீலை வழியா வெளிச்சம் சாவித்திரி என்ன பண்றான்னு பாத்தது. 'Sweet Dreams' னு எழுதியிருந்த pajamasல படுத்துண்டபடியே time என்ன ஆச்சுன்னு பாத்தா சாவித்திரி. மணி எட்டை நெருங்கிண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கலாமேன்னு நினைக்காம நன்னா தூங்கின திருப்தியோட படுக்கையைவிட்டு எழந்தா. எழுந்த கையோட படுக்கையை சரி பண்ணி அதுமேல வண்ணமிக்க விரிப்பைப் போட்டுட்ட பல் துலக்கப் போனா.

சிறிது நேரத்தில் சமையலறைக்கு வந்து பீங்கான் kettle ல தண்ணி சூடு பண்ணினா. அந்த நேரத்துல தலைமுடியை பின்னோக்கி jessore சீப்பால இறுக்கமா வாரி முடிஞ்சிண்டா. கெட்டில் சத்தம் போட ஆரம்பிச்சது. வடிகட்டி ஒண்ணு எடுத்து அதுல கமகமக்கிற Darjeeling டீத்துகளை நிரப்பி அதை ஒரு வெள்ளை cup மேல வெச்சு கொதிக்கற கெட்டில் தண்ணியை அந்த வடிகட்டில நிதானமா ஊத்தினா. அந்த உக்கிரத்துக்கு ஈடுகுடுக்க முடியாம அந்த டீத்துகள்கள் வாசனையைப்பரப்பி தன்னுள்ளே தேக்கி வெச்சிருந்த சாரை(juice) அந்த cupல கொண்டு செலுத்தித்து. சூடான பாலை அந்த டீல கலந்து ஒரு spoon சக்கரையைப் போட்டு மணக்கற கொதிக்கற டீ ரெடி ஆச்சு. அதை ஒரு  saucer ல வெச்சு verandah ல இருந்த coffee table ல வெச்சுட்டு அன்றைய Statesman newspaper easychairக்கு கொண்டு வந்தா. டீயைப் பருகிண்டே news படிக்க ஆரம்பிச்சா.

ஜோதி பாசு, நரசிம்ம ராவ், லாலு எல்லோரையும் கடந்து entertainment pageக்கு வந்தா. New Alipore Cultural Academy ல அன்றைக்கு Parveen Sultana ஓட Ghazalனு போட்டு அவளோட interviewவும் வந்திருந்தது. அப்பத்தான் சாவித்ரிக்கு ஞயாபகம் வந்தது HSBC தான் அந்த program sponsor பண்றதுன்னு. உடனே Corporate Banking Head Chacko க்கு ஒரு phone போட்டு ரெண்டு ticketsக்கு சொல்லி வெச்சா. அடுத்ததா மாதவனுக்கு phone பண்ணி அவன் வீட்டிற்கு 1 மணிக்கு வரதா சொல்லிவெச்சா.

10 மணி தான் ஆச்சு.  அவளுக்கு இருப்பு கொள்ளலை .  அங்கேயும் இங்கேயும் நடந்து பாத்தா.  இந்த தவிப்பு அவ இது வரை அனுபவிக்காத ஒரு தவிப்பு, restlessness ?  ஆனா இது சள்ளையா  இல்லாம இன்பமான ஒரு உணர்வா இருக்கு. கடிகாரத்து மேலயும் நேரத்து மேலயும் கோவம் வந்தது.  1 மணி ஆரத்துக்கு இவ்வளவு நாழியா?  காலத்தையே lazy ன்னு கடிஞ்சுண்டா .  11 மணி ஆரத்துக்கு 11 மணி நேரம் ஆனா மாதிரி இருந்தது அவளுக்கு! ஒரு குளியலைப் போட்டுட்டு bright கலர் குர்தாவும் blue ஜீன்ஸுமா கிளம்ப ஆயத்தமானா.  சாயங்காலம் 5 மணிக்கு தானே concert , இப்பவே எப்படி அதுக்கான டிரஸ் போட்டுக்கறது? மாதவன் வீட்டிற்குப் போய் எப்படி டிரஸ் மாத்திக்கறதுன்னு மனசு ஒரு கணம் யோசிச்சாலும் அந்த objection ஐ அறவே ஒதுக்கி  வெச்சுட்டு துணிமணிகள , ஆடை ஆபரணங்களை ஒரு travel bag ல எடுத்து வெச்சுண்டா. அடிக்கடி வேலை விஷயமா travel பண்றதால அவளுக்கு இது ஒரு ஸ்ரமமாத் தெரியலை. 12 மணி ஆனதும் வீ ட்டைப் பூட்டிட்டு bag ஐ பின்னாடி வெச்சுட்டு தலைல மாட்டிருந்த sun glasses ஐ கண்ணுக்கு மாட்டி car start பண்ணினா. அவளோட மனப்பிரதிபலிப்பா அந்தக் car உம் ஒரு உற்சாகத்தோட கிளம்பித்து.

போகும் வழியில் ஞாபகத்தோட ராமகிருஷ்ணா lunch home ல சுட சுட வெண்பொங்கல், ரச போண்டா, கேசரி pack பண்ணிண்டா.  கார் ல இருந்த ஒரு அழகான ஒலைக்கூடைல அந்த பார்சல் ஐ வெச்சிட்டு மாதவன் வீட்டை நோக்கி ஓட்ட ஆரம்பிச்சா. அவன் வீட்டுக்குப் போய் காலலிங் பெல்லை அமுக்கினா. மாதவன் வர 1 நிமிஷம் ஆச்சு.

"என்ன சாவித்திரி ரொம்ப நேரம் காக்க வெசுட்டேனா"?

"இல்ல.  ஆனா எனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுத்து".

"அய்யயோ, அப்படியா, நான் ஒண்ணும் சமைக்கலியே இன்னும்!"

"அதை guess பண்ணி தான் உங்களுக்கும் சேர்த்து வரும் வழியிலேயே வாங்கிண்டு வந்திட்டேன். சாப்பிடலாமா?"

"That's  very thoughtful of  you. முதல் முறையா என்னைத்தேடி என் வீட்டுக்கு வரீங்க, நான் உங்களுக்கு விருந்து வெச்சிருக்கணும், முடியாம போச்சே!"

"அப்படியெல்லாம் வெறும்  விருந்து வெச்சு முடிக்கற விஷயம் இல்ல இது! என்னோட எதிர்பார்ப்புகள் அதிகம்! "என்று சொல்லி அங்கிருந்த டேபிள் ல சாப்பாட்டை பிரிக்க ஆரம்பிச்சா.அவனுக்கு,அவளையும் அவளது inhibition இல்லாத செயல்களையும் பாக்க பாக்க வினோதமா இருந்தது.சாப்பிட்டதும் ரெண்டு பேருமா அவன் வீட்டை சுற்றியிருந்த தோட்டத்துல நடக்கச் சென்றார்கள்.  அப்ப தான் அவ  Parveen  Sutana பற்றி பேச ஆரம்பிச்சா. "நான் பர்வீன் சுல்தானோட Fan. அவளோட Ghazals எனக்கு ரொம்ப பிடிக்கும்.  அந்த Gharana வழி அவளோட speciality. அவளோட முத்திரை அதுல நன்னா தெரியும்.  அவளோட அப்பா Afghan, அம்மா Iranian னு நினைக்கிறேன். அவளோட complexion லயே அது தெரியும்.  அவ பாடின R .D.  Burman பாட்டு ரொம்ப பிரசித்தம். நான் நிறைய அவ concerts போயிருந்தாலும் இன்னிக்கு special ஆ நினைக்கிறேன் . உன்னோட சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்குப் போறது ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கப் போறது!

அவ தனதா  'உன்னோட'ன்னு சொன்னது அவனுக்கு எதிர்பாராத திகைப்பையும் மகிழ்ச்சியும் கொடுத்தது. அவ கையை கோத்துண்டு அவ முகத்தை நேரா பாத்து அவ பேசறதை ரசிச்சிண்டு நடந்தான். அவ அவனோட மிகவும் நெருக்கமா அவனை உரசிய படியே நடந்து வந்தா.
திரும்ப வீட்டிற்கு நடந்தாங்க.  வீட்டில் நுழைந்ததும், "மாது, உங்க வீட்டுல mirror இருக்கு இல்ல?நான் இங்க தான் டிரஸ் மாத்திக்கணும்".

"அப்படியா?, mirror னு தனியா இல்ல ஆனா இந்த cup board mirror இருக்கு".

"அது போதும். எனக்கு ஒரு 30 minutes time குடு நான் dress பண்ணிண்டு வந்துடறேன்" னு சொல்லி அவனைப் பிரிய மனமில்லாம அடுத்த அறைக்குப்போய் கதவை லேசா மூடிக்கொண்டாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது.  மாது அடுத்த அறையிலிருந்து blue jeans, வெள்ளை ஜிப்பா அணிந்து சாவித்ரியை எதிர்கொள்ள வந்தான். வெளி வந்த சாவித்ரியைப் பார்த்து திறந்த வாய் மூடாமல் நடந்த இடத்துலயே சிலை போல் நின்றான். எற்கனவே அவள் ஸ்தம்பிக்க வைக்கிற அழகு என நினைத்திருந்த அவனுக்கு அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்த விதம் அவனை வேறு உலகத்துக்கு அழைத்துச்சென்றது. வேறு ஏதும் சொல்லத்தோன்றாமல் 'Beautiful' என்று சொல்லி நிறுத்திக்கொண்டான். அவனுடைய திகைப்பையும், அகல விரிந்த கண்களையும் பார்த்த சாவித்ரி, 'ஏய், இதுக்கே இப்படி ஆயிட்டேன்னா மீதி நகாசு வேலைகளைப் பார்த்து என்ன ஆவ?.  வா, எனக்கு கொஞ்சம் help பண்ணு என்றவாறே அவனிடம் gold color glittering polish  குடுவையைத் தந்து "இதை என் நகங்களுக்குப் போட்டு விடு. நான் நகங்களுக்கு வெளில எல்லாம் smudge பண்ணிடுவேன்".

வெங்காய சருகு போன்ற material .  அதுல மேல 2"க்கு ரெட் border . அதே போல் கீழ blue border .அந்த border க்கு மேல 18"க்கு purple , blue , light orange ல வண்ண வண்ண பூக்கள். A riot of colors! மீதி இடமெல்லாம் உடல் நிறத்துல plain saree. அந்த புடவைலேருந்தே cut பண்ணி 'சிக்' குனு தெச்ச blouse.கழுத்துக்கு கருப்பு choker ல பெரிய சைஸ் ல Swarovski கல் பதிச்ச pendant.அதுக்கு matching ஆ கா துக்குதொங்கட்டான் , கைக்கு bracelet. சீராக வாரப்பட்ட கூந்தல். பின்னாம அப்படியே தொங்க விட்டிருந்தது அந்த நீள முடியை இன்னும் அழகா எடுத்துக் காட்டியது. இந்த மாதவன்  இல்லை, அந்த மாதவனே பாத்திருந்தாலும் நிலை தடுமாறியிருப்பது திண்ணம். இது திரும்பிப் பாக்கற அழகு இல்ல. திரும்பவே முடியாம பாத்துண்டே இருக்கற அழகு!

"மாது, இப்படியே பாத்துண்டிருந்தா Concert க்கு லேட் ஆயிடும். வா, அந்த bench ல உட்காருவோம். nail polish முடிஞ்சா அப்புறம் ஒரே ஒரு விஷயம் தான். Then I  will  be ready".  உனக்கு இந்த வெள்ளை ஜிப்பா  அழகாத்தான் இருக்கு, இருந்தாலும் எனக்கு matchiing ஆ உனக்கும் ஒரு zari work பண்ணின  beige  குர்தா உன் cupboard லேருந்தே எடுத்துத் தரேன் என்று சொன்னவளிடம் அருகில் சென்றமர்ந்தான்.  எவ்வளவு பெரிய பொறுப்பு குடுத்துட்டா! இருந்தாலும் இந்த பொறுப்பை செவ்வனே செய்வது என்று மொதல்ல அவ saree , blouse ல கறை வந்துடாம இருக்க ஒரு வெள்ளை towel  ஐ அவ தோள், புடவைல போர்த்தினான். சாவித்ரிக்கு அவன்கிட்டேருந்து கிடைக்கிற இந்த கவனமும், ஈடுபாடும் வெகுவாக பிடிச்சிருந்தது. மெதுவாக அந்த nail  polish மூடியைத் திறக்கறத்துக்கு முன்னமே அதை நன்னா குலுக்கினான். பின்பு அந்த மூடியை careful ஆத்  திறந்து அந்த சன்னமான brush ஐ அந்த விளிம்பிலேயே தடவி அதுல இருந்த excessive polish ஐ வடிய விட்டான். இதைப் பார்த்த சாவித்ரி சந்தோஷம் தாங்காம சிரிக்க ஆரம்பிச்சா. " ப்ப சிரிக்காத கண்ணம்மா , polish உன் saree ல கொட்டிடப் போற து என்றதும், 'ஓகே, ஓகே' என்று சொன்னவாறே அவன் கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள். இப்படியெல்லாம் bonus கிடைக்குன் னா  தினம்  தினம் Nail polish போடலாமே என நினைத்து அவன் வேலையை ஆரம்பித்தான். அந்தச் சமயத்தில் அவள் அந்த வண்ண polish select செய்ததை நினைத்து அவளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால் . பிள்ளையார் சுழி போடுவது போல் அவள் விரல்களைப் பிடித்து அதில் முத்தம் ஒன்றை ஊன்றிப் பத்தித்தான். அவளுக்கு அது மிகவும் தேவையாய்  இருந்தாலும் எதிர்பாராத நேரத்தில் கிடைத்ததில், rouge தடவாமலேயே அவள் கன்னங்கள் நொடிப் பொழுதில் சிவப்பாகின. பத்து விரல்களுக்கும் முடிக்க 15 minutes ஆச்சு. அங்க இங்க கறை  ஆகாம polish போட்டதற்கு அவனை பாராட்டினா.





"இதுக்கப்புறம் ஒரு வேலை பாக்கின்னு சொன்னியே அது என்னன்னு" ஆவலா கேட்டான்.
"அதுவா, இரு, இதோ வரேன்" என்று சொல்லிட்டு அடுத்த அறைக்குள் போனா.
5 நிமிடங்கள்ல , "இப்ப உள்ளே வா" என்று அழைத்தாள்.
Suspense தாங்காமல் அவன உள்ளே சென்றான். கண்ணாடி முன்னே அவள் ஒயிலா நின்று அவனையே உற்றுப்பார்த்தாள்.
"என்ன கண்டுபிடிச்சுட்டயா?" என்றாள்.
அவன், அவளைப்பார்த்துவிட்டு ஒண்ணும் புரியலையே" என்றான்.
"என் உதடுகளைப்பார்" என்றாள்.
", lipstick ஐச் சொன்னியா நான் வேற என்னவோன்னு நினைச்சேன்" என்று கூறி embarass ஆனான்.

"ஓகே.  எனக்கு எந்த குர்தான்னு சொல்லு, கிளம்புவோம் "

அவ எடுத்துக் கொடுத்த beige குர்த்தாவை மாட்டிண்டு அவ பக்கத்துல mirror முன்னாடி போய் ய் நின்னான். அவ அதை அங்கீகரிச்சா.

ரெண்டு  பேரும் அவன் கார்ல ஏறி கிளம்பினார்கள். அந்த கிளப் நெருங்கறச்சயே பணக்கார வாடை அடிக்க ஆரம்பிச்சது. சாவித்ரியோட saree  அவனுக்கு simply grand என்று  பட்டது.  valet parking க்கு காரைக் குடுத்துட்டு அரங்கத்துக்ககுள்ள போய் அவர்களோட reserved seats ல அமர்ந்தார்கள்.  அப்பவே hall நிரம்பி வழிய ஆரம்பிச்சது.

Correct 6 மணிக்கு பர்வீன் சுல்தானா தக தகன்னு ஊசி வானம் புடவை மாதிரி கட்டிண்டு சலாம் போட்டுட்டு உட்கார்ந்தா. ஏக நகை , மேக் அப் , dye - எல்லாமே மிகையாகவும், அனாவசியமாயும் தெரிஞ்சது..
ஆனா அடுத்த மூணு மணி நேரம் ஹிந்துஸ்தானி ராகங்கள்ல audience  எல்லோரும் கிறங்கிப் போய் உட்கார்ந்திருந்தாங்க. சாவித்திரி, மாதவன் கிறக்கத்துக்கு வேற ஒரு காரணமும் இருந்தது.  Standing ovation எல்லோரும் எழுந்து நின்னு குடுக்கறச்ச இவர்கள் இருவரும் சிறைப்பட்டிருந்த கைகளை விலக்கி கை தட்ட சில நொடிகள் பிடித்தன.

வெளில வந்து Car எடுத்துண்டு அவளைக் கேட்காமலேயே மாதவன் Howrah Bridge க்கு அருகாமையில் இருக்கும் Bengali Dhaba carஐ நிறுத்தினான் . ஒதுக்குப்புறமா இருந்த குடை கீழ அவ உட்கார chair ஐ நகத்தி அவ உட்கார்ந்ததும் அவ கிட்ட சொல்லிட்டு ragda patties  ஆர்டர் பண்ண Open flame kitchen நோக்கி போனான். ஆர்டர் பண்ணிட்டு நேரத்தை வீணாக்க  விரும்பாமல் மறுபடியும் அவளருகில் வந்த அமர்ந்தான்.  வெகு அருகாமையில் ஹூக்லி river இன் சலனம், Howrah bridge  மேல வாகனங்களின் சத்தம், பக்கத்துல waiters டேபிள் clear பண்ணி எழுப்பும் ஓசை, தத்தித் தத்தி நடந்து வரும் புறாக்கள் எதுவுமே இவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை அந்தத் தருணத்தில்.  அவர்களது மௌனத்தைக் கலைக்க waiter அவர்கள் table ல்.ragda patties உம் fresh சப்போட்டா juice உம வைத்துவிட்டுப் போனார். இப்போது அவர்கள் கவனம் உணவில் இறங்கியது. இதைத் தவிர ஆலுகாப்லி’ , oven  baked  vegetable  samOsa , ‘மொச்சர்சொப் (banana flower croquettes), Daler Bora (spicy Lentil fritters) என  unconventional dinner items order பண்ணி அவளை யோசிக்க விடாம வியக்க வெச்சிண்டிருந்தான். Dessert க்கு Kesar rasmalaai தருவிச்சு அன்றைய அனுபவங்களுக்கு ஒரு symbolic touch குடுத்தான்.

வீட்டிற்கு கிளம்பரச்சதான் அவன் தோள்ல சாஞ்சுண்டு அவ அவன்கிட்ட, "மது, இந்த தினம் என் வாழ் நாளல்ல மறக்கவே முடியாத நாள். இத்தனை happy யா நான் இருந்ததே இல்ல. இந்த இன்பம் எனக்கு தினம் தினம் ,மறுபடியும் மறுபடியும், அடிக்கடி, வேணும்.  It's not the food, it's not the concert, it's not the outing..உன்னுடனான நெருக்கம், இந்தத் தனிமை, இதெல்லாம் தர அந்த possessiveness , இது தான் காதாலாlன்னு கேள்வி எழுப்பாம , இத்தனையும் காதலான்னு நினைக்க வைக்கிறது மாது. I am in love with you..you have written a chapter in my life with indelible ink. இப்ப , இந்த நிமிஷத்துல, இந்த நொடில ரொம்ப ஹாப்பி ஆ இருக்கேன் மாதவன்" னு தன்னிலை மறந்து சொல்லிண்டிருந்த சாவித்ரியின் முகத்தைக் கையில் ஏந்தி, "உன்னால சொல்ல முடிந்த இத்தனை அழகான வார்த்தைகளுக்கு நான் என்ன சொன்னாலும் ஈடாகாது சாவித்திரி. I am madly in love with you too "னு சொல்லி அவளை இறுக அணைத்துக்கொண்டான். இந்த இறுக்கத்துலயம், அபரிமிதமான ஆசையிலும் ஈடுபட்டிருந்த இவர்களுக்கு முத்தம் ஒரு இடர்பாடு என்று நினைத்தார்களோ என்னவோ, அப்படியே எழுந்து Car ஐ நோக்கி நடந்தார்கள்.



வீட்டை அடைந்ததும், போக மனமில்லாமல், சாவித்திரி அவனிடம், 'நாளைக்கு ஆபீஸ் போகவே மனமில்லை மாதவன். அடுத்த வாரம் முழுவதும். ரொம்ப busy schedule. அதை விட சோகம் என்னன்னா next week end  எங்க Managers retreat Darjeeling ல வெச்சிருக்காங்க.  long weekend  வேற. உன்னை whole week பார்க்க முடியாது. However , நேரம் கிடைக்கும் போதெல்லாம் உன்னை நான் கூப்புடுவேன்.நீ Busy யா இருந்தாலும் என்னோட பேசணு ம். I will be longing to talk to you மாதவ். இப்ப கெளம்பறேன் நான். வீட்டுக்குப் போயிட்டு phone பண்றேன், சரியா?  Now , Give me a hug நு சொல்லிட்டு அவனை இழுத்துண்டு car க்கு வந்தா. கார் ஸ்டார்ட் ஆயிடுத்து ஆனா அவ தான் மக்கார் பண்ணினா. அவளோட காதல் சூறாவளில அவன் ஒரு சருகாவே இருக்க விரும்பினான். அப்படி  இருந்தால் மட்டுமே அவ வேகத்துக்கு அவனால் ஈடுகொடுக்க முடியும்!


சாவித்ரி கொண்டு செலுத்தப்பட்டவள் போல் அவளது காரை ஓட்டிச்சென்றாள். வீடு வந்துவிட்டது. கதவைத்திறந்து வீட்டினுள் சென்றால் அவளுக்கு அந்தத் தனிமை அவள் மேல் திடீரென திணிக்கப்பட்டாற் போலிருந்தது. மாது இல்லாமல் இத்தனை நாள் அவள் எப்படி வாழ்ந்தாள் என்பது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.  அவனைக் கூப்பிடலாம் என்று செருப்பைக்கூட கழட்டாமல் phoneஐ நோக்கி விரைந்தாள். Phone தானாகவே அடிக்க ஆரம்பித்துவிட்டது. எடுத்தாள். 

"சாவித்ரி, வீடு வந்து சேர்ந்துட்டியா?

"மாதூ, இந்த வீட்டுல தனியா இருக்கப் பிடிக்கலை மாது, இப்பவே அங்க கிளம்பி வந்துடணும் போல இருக்கு. குளிருக்கு அடக்கமாஉன்னை கட்டி அணைச்சுண்டு அந்தச் சூட்டுல உன் மடிலயே தூங்கணும் போல இருக்கு. Darjeeling போய்ட்டு வந்து notice குடுத்துட்டு resign பண்ணிடப் போறேன். அப்புறம் உன்னோடயே இருந்துடப் போறேன். சரியா ?"

"கரும்பு திங்கக் கூலியா கண்ணம்மா? நிச்சயமா. இப்ப தூங்கு. lots of love"

"சரி, மாது. நீயும் தூங்கு. நாளைக்குக் கூப்பிடறேன்." என்று சொல்லி phoneஐ வைத்தாள்.

'நானே நானா, யாரோ தானா, மெல்ல மெல்ல மாறினேனா' என்று பாடிக்கொண்டே குளிக்கச்சென்றாள்.  எத்தனை நேரம் குளித்தாள் என்று தெரியாது. வாசலில் மணி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது.  மடமட வென்று தன் பைஜாமாவில் நுழைந்து விறு விறு வென்று கதவைத்திறந்ததும் பார்த்தால் மாது!

"என்ன மாஆஆஆஆஆது என்று சொல்லி முடிக்க விடாமல் அவனிதழ்கள் அவளிதழ்களைத் தாழிட்டன. அவளால் நம்ப முடியவில்லை. அவன் இதழ்களை எடுத்தும் அவன் கைகளில் துவண்டு அடுத்த இதழ் ஆக்கிரமிப்பை எதிர் நோக்கிக் காத்திருந்தாள். அவன் அவளை அணைத்தவாறே தூக்கி மூவர் உட்காரும் sofaவில் இடநெருக்கடி ஏற்பட்டாற்போல் ஒரு இருக்கையில் அமர்ந்து பேசி நேரத்தை விரயம் செய்யாமல் உதடும் கருத்துமாய் இருந்தார்கள். 

ஞயாபகம் வந்தவளாய்அவனை அணைத்துக்கொண்டே சமையலறை சென்று அடுப்பை பற்ற விட்டாள். Frigல் வைத்திருந்த jal frazieஐ எடுத்து சூடு பண்ணினாள், சப்பாத்தியையும் லேசாக சூடு பண்ணி அவனை அணைத்தவாறே sofaவிற்கு இழுத்துச்சென்றாள். Multi tasking..அடுப்பை பற்ற வைத்து, அவனை அணைத்து, அவன் கைகளுக்கு ஈடு கொடுத்து, சப்பாத்தியைத் திருப்பி, அவன் உயரத்திற்கு எம்பியவாறே காரியம் பார்ப்பது அவளுக்கு அத்தியாவசியமாய் இருந்தது. வெகு நேரம் சயன நிலமையிலேயே there is no tomorrow என்பது போல் அந்த நெருக்கத்தில் இணக்கமாய் இருந்தார்கள்.  அடுத்த நாள் வேலை நினைப்பு அந்த இறுக்கத்தைத் தளர்த்தி புக்ஷ்ப விமானத்தில் இந்த லோகத்தில் இறக்கி விட்டது.
அவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள். அந்த இன்ப, இனிய நிறைவுடனேயே படிக்கையில் விழுந்தாள். கனவில் அவன் வருவான் என நினைத்து அவசரமாகத் தூங்கினாள்.

அடுத்த ஒரு வாரம் அவர்களது வேலை பளு அவர்களை அண்ட விடாமல் செய்தது. மாதுவும் வெள்ளிக்கிழமை திடீரென Bombay பயணிக்க வந்துவிட்டது. இருவருக்கும் அதில் பெரிய வருத்தம் அவளும் மறு நாள் காலை கிளம்பி Darjeeling செல்ல வேண்டும். அதற்கான துணி மணிகளை எடுத்து வைக்க ஆயத்தமானாள்.

 டார்ஜிலிங்!

கிட்டத் தட்ட நிலப் பரப்புலேருந்து 7000 அடி உயரத்துல இருக்கற ஊர்!, சுத்திவர மலைகள். எங்க பாத்தாலும் பச்சை பசேல் னு தேயிலைத் தோட்டங்கள். அந்தத் தோட்டத்துல எறும்பு போல சுறுசுறுப்பா  வேலை செய்யும் பெண்கள்!  சாவித்திரிக்கு இது ஒரு உயரமாவேத் தெரியலை. இப்ப மாதுவுடனான உறவுல அவ எட்டாத உயரத்துல சஞ்சரிச்சிண்டிருக்கா. அவ Hotel  ஜன்னல்லேருந்து ceiling to  carpet தொங்கிண்டிருந்த திரைச் சிலையை விலக்கி  இயற்கையின் பிரும்மாண்டத்தை வியந்திண்டிருந்தா. பக்கத்துல அவளுக்கு இதை ரசிக்க மாது தேவையா  இருந்தது. 'ஊம்' நு பெருமூச்சு விட்டுட்டு meeting ற்கு கிளம்ப ஆயத்தமானாள் .

அவ ஏற்கனவே இத மாதிரி retreats க்கு மூணு  முறை போயிருக்கா.  இதுல ஒண்ணும் புதுசாத் தெரியலை.  இருந்தாலும் யந்திரம் மாதிரி  Team  Building exercise , Communication Game , problem solving approach , stress management classes , இன்னும் பிற events எல்லாத்துலயும் பங்கேத்துண்டுட்டு எப்படா free ஆவோம்னு நெனச்சுண்டா. அவ கூட வேலை பார்க்கும் ரூபா க்கு  சாவித்ரியோட இந்த ஈடுபாடு இல்லாத்தன்மை strange ஆத்  தெரிஞ்சது.எப்பவுமே இந்த மாதிரி events ல அவளோட பங்கேற்பு பாராட்டத்தக்கதா இருக்கும். அன்றைய events முடிஞ்சதும் ரூபா அவளை ஓரங்கட்டினா .  "என்ன ஆடிட்டர் madam , இந்த பனி மடர்ந்த மலை மேல வந்து அந்த பனிக்கு company குடுக்கறத்துக்கு நீங்களும் பனி மூட்டமாயிட்டீங்களா?" என்று சம்பாஷணையை துவக்கினாள்.  சாவித்ரியும்  மூடி மறைக்காம உடனே யாரேனும் கேக்க மாட்டாங்களான்னு காத்துண்டிருந்த மாதிரி "ரூபா, I  am in Love ' என்று தேக்கி வைத்திருந்த சந்தோஷத்தையெல்லாம் ஒருங்கிணைத்து அவ முகத்துல கோண்டு வந்து ரூபாவை ஆவேசமாக் கட்டி மூச்சு முட்ட வைத்தாள்! அந்த மலைகளின் backdrop , தேயிலையின் வாசம், அந்த உயரம், சுவாசிக்க சுகந்தமானா காத்து, பனி மூட்டம், ஆங்காங்கே தூறல், தூரத்துல கருத்துக்கொண்டு வரும் மேகம்! சாவித்ரியோட காதலுக்கு  அந்தச் சூழ்நிலை  சத்தமில்லாத symphony வாசிக்கறா மாதிரி இருந்தது ரூபாவுக்கு!  கடந்த மூணு நாட்கள் ல அவளுக்கும் மாதுக்கும் இடையே இடைவெளி இல்லாம வளர்ந்த  relationship ஐ ரூபா கிட்ட பகிர்ந்திண்டா.  இரண்டு பேருக்கும் நடந்த இந்த intense conversation ல இடியும் மின்னலுமா வானத்துல அந்த கருமேகத்துலேருந்து வந்த மழையை அவங்க கவனிக்கலை.

நிமிஷமா மழை கொட்ட ஆரம்பிச்சது.  மழை நீர் உடனடியா பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.  சைரன் ஓசை  எங்க பார்த்தாலும் கேக்க ஆரம்பிச்சது.  ஹோட்டல் terrace லேருந்து flood  lights  வெளிச்சம் பாய்ச்சியது.  இயற்கையின் இந்த வேகம் ஆச்சரியமாவும் பயமாவும் இருந்தது இருவருக்கும். பேச்சு சுவாரஸ்யத்துல ஹோட்டலிலிருந்து வெகு தூரம் அவர்கள் வந்ததை அவர்களே  உணரவில்லை.  வேக வேகமா நடந்து ஓட ஆரம்பித்தார்கள்.  நிலம் உறுதியாக இல்லாமல் சறுக்க ஆரம்பித்தது. பாய்ந்து வரும் நீர் மண்ணையும் அரித்துக்கொண்டு வேகமாக பள்ளத்தாக்கை நோக்கிப் பயணித்தது. அப்போது தான் அவர்கள் எதிர்பாராத சமயத்தில் காற்று வேகமாக வீசி அவர்களைக் கீழே தள்ளியது. ரூபா அங்கு போட்டிருந்த இரும்பு வேலியில் சிக்கிக் கொண்டாள்.  சாவித்திரி இருந்த இடத்தில் வேலி  விலகி இருந்ததால் கீழே இருந்த அடுத்த படியில் தள்ளப்பட்டாள்.  சுதாரித்துக்கொண்டு  அந்த வேலியை கைப்பற்ற நகந்த  முயற்சியில் வேகமாகப் பாய்ந்து வரும்   நீரினால் கீழே தள்ளி அதனூடே ஏற்பட்ட landslide ல் மண்ணும், நீரும் சேர்ந்து செய்த சதியில் அடித்துச் செல்லப்பட்டாள். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ரூபாவிற்கு நம்பமுடியவில்லை. வேலி கம்பியில் சிக்கிக்கொண்டிருந்த அவள் கண்முன்னே நடந்த இந்தக் கொடூரத்தைப் பார்க்க முடியாமல் மயக்கமானாள்.






இந்த இயற்கையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கையில் விளக்கும் கயறுமாக landslide, மழையில் சிக்கிக்கொண்டவர்களைத்தேடி வர ஆரம்பித்தார்கள்.ரூபா வை stretcher ல் தூக்கி வைத்து ambulance  க்கு  எடுத்துச்சென்றார்கள். அப்போது தான் மற்றொரு சக ஊழியர், ரூபாவுடன், சாவித்ரியும் சென்றதைக் கூறி அவளைத்தேடச் சொல்லி Air Force , BSF முதலியோருக்கு செய்தி அனுப்பினார்கள்.  நிற்காத மழை, நிலச்சரிவு, இருட்டு முதலியவற்றால் Helicopter , Plane முதலியவற்றை  இயக்க முடியவில்லை. 8 மணி நேரம் தன்  சீற்றத்தைக்  காண்பித்து விட்டு மழை ஓய்வெடுத்தது.  இன்னமும் நிலச்சரிவு ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருந்தது. விடியற் காலை நேரம்.  ரூபா விழித்துக் கொண்டுவிட்டாள் .  தான் கண்ட அந்த  பயங்கரத்தை விவரித்தாள்.  அவள் கூறிய  இடத்திற்கு, Rescue Team விரைந்தது. அதே சமயத்தில் பல சடலங்களையும் பலத்த காயமுற்றவர்களையும் தாங்கிக்கொண்டு ambulanceம்  , stretcherம்   வந்த வண்ணம்  இருந்தன.  

Doordarshan இல் செய்தியைப் பார்த்த மாதுவிற்கு முதலில் இதன் gravity உறைக்கவில்லை.  பிறகு தான் சாவித்ரி darjeeling ல் இருப்பதுடன் இந்த calamity ஐ சேர்த்துப் பார்த்தான். கதி கலங்கிப் போனான்.  உடனடியாக பல பேருக்கு phone செய்தான்.  HSBC யில் அவனுக்குத் தெரிந்தவருடன் பேசினான்.  சாவித்ரியைப் பற்றி தெரிந்து கொண்டான்.  செய்வதறியாது திகைத்தான். எல்லா flights , போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டதால் அங்கு போக வழி இல்லாமல் போயிற்று.  மறுநாள் வந்த பத்திரிகைகளில் நிரந்தரமாகக்  காணாமல் போனவர்கள் பட்டியலில் சாவித்ரியின் பெயரும் இருந்தது.  ரூபாதான் கடைசி நிமிடங்களில் அவளுடன் இருந்தாள்  என்பதைத் தெரிந்து அவளைப் பார்க்க hospital க்கு  சென்றான்.  அவள் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை.  சில காயங்களுக்கும், சிராய்ப்புகளுக்கும், trauma விற்குமான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தாள். மாது அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு,  அவள் நலனை விசாரித்தான்.  அவள் அவனைப் பார்த்ததும் கட்டுக்கடங்காமல் கதறி அழுதாள். அடுத்த சில மணி நேரங்களில் சாவித்ரி தன்னிடம் பகிர்ந்து கொண்ட  விஷயங்களை அவனிடம் சொல்லச்  சொல்ல அவன் கண் சிவந்து சொல்லொணாத்துயரில் மூழ்கினான். இந்த வாழ்க்கையின் கொடூரத்தை எண்ணி இனி வாழ்வதில் பயன் இல்லை என நினைத்தான்.  தன் கண் முன்னே எவ்வாறு காற்றும் மண்ணும் சேர்ந்து சாவித்ரியை அதள பாதாளத்திற்கு கடத்திச் சென்றது என்பதை அழுத வண்ணம் graphic ஆக விவரித்தாள் ரூபா.அவனுக்குத் தெரிந்து விட்டது அவனது சாவித்திரி இனி அவனுக்கு கிடைக்க மாட்டாள் என்று. அவனுடன் வந்த நண்பர்கள் அவனை அழைத்துச் சென்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு அவர்களுடனேயே தங்க வைத்துக் கொண்டார்கள்.

அவளில்லாமல் அவன் வாழ அவசியமாகிவிட்டது.  நடைபிணமாகவே காலத்தைத் தள்ளினான். அதோ இதோ  என்று நேற்று தான் போல் 18 வருடங்கள் ஆகி விட்டது.  முதன் முறையாக, அவன் இருந்த வீட்டைக் கோவிலுக்கு எழுதிக் கொடுக்க, இத்தனை வருடங்களுக்குப் பிறகு பவானி வந்திருக்கிறான்.  பானு அங்கேயே இன்னும் இருப்பதில் அவனுக்கு ஆறுதல்.

பானு இப்போது அவன் தோளைப் பற்றிச் சொன்னாள்.  "எத்தனை சோகத்துல வாழ்ந்துண்டிருக்க மாது. இப்படி ஒரு tragedy ஒரு எதிரிக்குக் கூட வரக் கூடாது.

காவேரி, பவானி ரெண்டும் சேர்ர இடமான கூடுதுறைல சரஸ்வதி ஒரு invisible மூணாவது ஆறா ஓடிண்டிருக்குங்கறது தான் ஐதிகம். 

நீ, சாவித்திரி, நான் என நம்பதான் அந்த ஒன்று கலந்த கூடலாறு மாது.  கண்ணுக்குத்தெரியாத அந்த சரஸ்வதி தான் உன்னோட சாவித்ரி! நீ இப்போ எங்கேயும் போக வேண்டாம், இங்கேயே இந்த கூடலாறு பக்கத்திலேயே அவ நினைவோட நம்ப சொற்ப காலத்தைத் தள்ளுவோம்"

அவன் போட்ட கல் நீருக்கு அடில போய் சலனம் இல்லாம உட்கார்ந்தது.