Thursday, May 16, 2013

Pet's petty problems or "Mowgli's Solilquy"


My dear Mowgley’s Soliloquy:

To pee, or not to pee, that is the question:
Whether 'tis better in the room to suffer
The Slings and Arrows of outrageous Sruthi,
Or to take Toys against a Sea of troubles,
And by proposing end them: to lie, to sleep
No more; and by a sleep, to say we end
The heart-ache, and the thousand Natural shocks
That bushy hair too? 'Tis a consummation
Devoutly to be wished. To die to sleep,
To sleep, perchance to Dream; Ay, there's the tub,
For in that sleep of death, what dreams may come,
When we have shuffled off this mortal spoil,
Must give us pause. There's the respect
That makes Calamity of so monk life:
For who would bear the Whips and Scorns of Ma’am,

The Oppressor's wrong, the proud Dog’s untimely, 
[urge]
The pangs of despised move, the Nature’s relay
[frequent]
The insolence of ‘ruffies’, and the Spurns
That patient merit of the unworthy takes,
When I  myself might  Quietly make
With a bare food urn? Who would  fortell  dear?
To grunt and sweat under a hairy life,
But that the dread of something after passing,
The undiscovered  territory, from kennels
No true pet  reruns, Puzzles the spill,
And makes us rather bear those ills we have,
Than run to others that we know not of.
Thus kidney sense does make Cowards of us all,
And thus the Native hue of Resolution
am sicklied o'er, with the pale cast of Thought,
And enterprises of soiled  pitch and moment,
With this regard their currents turn awry
And get the blame as reaction. Soft you now,
The fair Sruthilaya, understand my umpteen reasons

Be all my funs remembered.: 

என் கால்கள் சொல்லும் கதை!


நான் தான் கால்கள் பேசுகிறேன்!


எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் வாயைத்திறக்காமல்(!) என் வேலயைச் செய்து கொண்டிருக்கிறேன். இவனுக்கு வெகு சின்ன வயது முதலே உழைக்க ஆராம்பித்துவிட்டேன்.

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் தெரு.  அங்கிருந்து சாமாராவ் உயர் நிலைப் பள்ளிக்குச் செல்வேன். வெகு தூரம் இல்லை.  இவனுக்கு அப்போது ஐந்து வயது தான் என்று பார்க்கும்போது  அது கொஞ்சம் தூரம் தான். பள்ளிக்குச் சென்றதும் முதலில் வழிபாட்டு அறைக்குச் (Prayer Hall) சென்று நிற்க வேண்டும்.  சிறிது நேரத்தில் அங்கு சம்பா ("எப்படி இருக்க சம்பாஉன்னை இவன் நெனச்சுக் கூட பாக்கறதில்ல தெரியுமா"?) வந்து பெருமையாக "வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்" என்று கலைமகள் மேல் ஒரு பாடலைப் பாடுவாள்.  இப்பவா இருந்தா இவனும் அந்தப்பாட்டைக் கேட்டுட்டு விமரிசனம் பண்ணி இவன் பாணில வார்த்தைகளைக் கோளாறு பண்ணி பாடிக்காட்டி இருப்பான். நடுப்பற மதிய உணவுக்குப்பின் ஒரு மணி நேரத்துக்கு ஓடிப்பிடிச்சு வெளயாடறேன் பேர் வழின்னு என்னை இங்கயும் அங்கயும் ஓட விடுவான். அப்பல்லாம் எனக்கு வலுவும் தெம்பும் இருந்தது. நானும் இணைந்து கொடுத்தேன்.  ஒரு நாலு மணி ஆச்சுன்னா பையைத் தூக்கிண்டு - நல்ல காலம் அப்பல்லாம் இப்ப இருக்கறா மாதிரி முதுகுப்பை ((backpack) பூரா புத்தகங்கள் கிடையாது - இவனோட "பவானி ஜுவல்லரி" பைல ஒரு கரும்பலகை, ஒடஞ்சு போன பலப்ப குச்சி, ஒல்லியா ஒரு தமிழ் புத்தகம், அதிரசம் மாதிரி பிஞ்சு போன ஒரு 1+1= 2 ன்னு போட்ட கணக்கு புத்தகம்.  இதையெல்லாம் தூக்கிண்டு விறுவிறுன்னு கண்மண் தெரியாம ஓடவிடுவான்.  அந்த தெரு மொனைல எதுக்காகவோ ஒரு பெரிய சரிவு கட்டி இருக்கும்.  அங்க வந்த ஒடனெ இவனுக்கு ஒருநாளைப்போல அவசரமா ஓண்ணுக்கு இருக்க வந்துடும்.  மட மடன்னு பையை தோளுக்கு ஏத்திண்டு யார் வரா, போறான்னு பாக்காம காலுரையின் பித்தான்களை கழட்டி விட்டுட்டு அந்த சரிவுக்கு மேல ஒட்டி இருக்கற திரைப்பட போஸ்டர்களைத் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருப்பான்.  அந்தச் சரிவிலிருந்து பெருக்கெடுத்து வேகமாய் ஒடிவரும் சிறுநீர் என் மேல் படாமல் இருக்கு முடிந்த வரையில் ஒதுங்கிப் பார்ப்பேன். வீட்டிற்குச்சென்றதும் கொல்லைப்பக்கம் சென்று கிணற்றைச் சுற்றி ஓடுதல், மாமரத்தில் ஏறுதல் முதிலியவற்றில் ஈடுபடுத்துவான். ஏதெனும் ஒரு சமயம் இவனுடைய தந்தையுடன் திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருக்கும் அத்தை வீட்டிற்குச் சென்றது உண்டு. அதுதான் நான் முதல் முதலாக சென்ற 'தொலை தூரம்.

அடுத்தது இவன் வீடு மைலாப்பூரில் ஒரு குறுகிய தெருவில் அமைந்தது.  அந்தத்தெருவில் ஒரு குறுகலான சந்துபோல் இருக்கும்.  அந்த சந்தில் ஒரே சமயத்தில் ஒல்லியான ஆட்கள் ஒன்றரை பேருக்குமேல்  நுழைய முடியாது! (அந்த வீட்டுச் சொந்தக்காரர் சற்று பருமனான ஆள்.  மாதா மாதம் வாடகை கொடுக்க தாமதம் ஆனவுடன் இவனுடைய அப்பாவிடம் கோபமாகப்பேசிவிட்டுப்போவார்.  அதனால் இவனும் இவனுடைய அக்காக்களுமாக கோபத்தில் அவரை "குண்டன்" என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்). அந்த குறுக்குச் சந்தில் என்னை வேகமாக ஓடவிடுவான்.  ஐந்தாம் வகுப்பு வரை தெற்கு மாட வீதியில் "ராஜ ராஜேஸ்வரி பள்ளிக்கூடம்  என்ற பள்ளிக்கூடத்தில் பயின்றான்.  இந்த பள்ளிக்கூடம் இவன் வீட்டிலிருந்து அரை மைல் இருக்கும். சளைக்க மாட்டான். இதைத்தவிர மைதிலி டீச்சரின் மதிய உணவை அவர் வீட்டிற்குச் சென்று எடுத்து வருவதில் இவனுக்கும் இவன் நண்பன் திருநாவுக்கரசுக்கும் எப்போதும் போட்டி.  இவனுக்கு அப்படி ஏவல் புரிவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை.  ஆனால் திருநாவுக்கரசு எப்போதும் வகுப்பில் முன்னணியில்(First Rank) இருந்து வந்தான்.  இவன் எண்ணம் என்னவென்றால் அவன் மைதிலி டீச்சருக்கு ஏவல் பண்ணுவதால் தான் அவனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கிறது என கணக்கு போட்டான்.  சரியாக பள்ளிக் கணக்கைப் போட்டிருந்தால் மைதிலி டீச்சர் வீட்டு நடை மிச்சமாகி இருக்கும்.  திருநாவுக்கரசு(இனிமேல் 'திரு') வீடு பக்கத்து தெருவில் இருந்தது.  மாலை பள்ளி முடிந்ததும் வீட்டில் பையை வைத்துவிட்டு கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு அடுத்த தெருவுக்கு ஒட வைப்பான்.  திரு வின் அம்மா மிகவும் குண்டு.  பேசவே திணருவார்கள்.  திருவிடம் வெகு பிரியம்.  இவனுக்கும் திருவிற்கும் தண்ணியாக ஆறிப்போன ஏடுபடிந்த காபி கொடுப்பார்கள். அது என்னமோ அந்த காபி அடுப்புலய Fresh ஆரிப்போய் போட்டாமாதிரி இருக்குமாம்! அதை ஒரே மடக்கில் குடித்துவிடுவான்.  அந்த வீட்டில் எனக்கு ஓய்வுதான்.  திரு ஒவ்வொரு நாளும் சிவலிங்க பூஜை பண்ணுவான்.  அதற்கு இவன் எடுபிடி.  அவன் சொல்லும்போது தண்ணிவிடுவது, சந்தனம் அறைப்பது, குங்குமம் குழைத்துக்கொடுப்பது - இவை எல்லாம் இவன் வேலை. ஆனால் திருவிற்குத்தான் அந்த சந்தனம் குங்குமத்தை  சிவலிங்கத்திற்கு வைப்பதற்கு உரிமை.  இதுவும் திரு First Rank வாங்குவதற்கு முக்கிய காரணம் என்று இவன் தீர்க்கமாக நம்பினான்.  இந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இவனுடைய அப்பாவை ஒரு நாளைப்போல் "எனக்கு ஒரு சிவலிங்கம் வேணும்" னு நச்சரிக்க ஆரம்பித்தான்.  அவருக்கு இறை நம்பிக்கை உண்டே ஒழிய பூஜை புனஸ்காரத்தில் எல்லாம் நாட்டம்  கிடையாது. ஆகவே இவன் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை அவரும் இவனுக்கு சிவலிங்கம் வாங்கித்தரவில்லை இவனும் 20 பேர் படிக்கும் வகுப்பில் 8th Rank ற்கு கீழயே வாங்கிக்கொண்டிருந்தான்.

ஆறாம் வகுப்பு பென்னாத்துர் சுப்ரமணியம் ஐயர் உயர் நிலைப்பள்ளி (P.S. High School) admission ற்கு ஏக கெடுபிடி ஆகி விட்டது.  இவன் நெனச்சான், "அப்பா அந்த சிவலிங்கத்தை வாங்கிக்குடுத்திருந்தார்னா நானும் நல்ல Rank வாங்கி இப்போ சிபாரிசுக்குப் போய் நிக்க வேண்டாமோல்யோ". எப்படியோ இவனோட அப்பாவுக்கு அந்த ஸ்கூல் மேற் பார்வையாளர் கோதண்டராம ஐயங்கார் ரொம்ப பழக்கம்ங்கறதால இவன் அந்த பள்ளிக்கூடத்துல சேர முடிஞ்சது!  திடீர்னு ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்து விட்டு அவனோட அப்பாகிட்ட ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்!

தொடரும்...

ஒரு கறி கூட்டாகிறது!

முதலில் தலைப்பைப்பற்றி எழக்கூடிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகிறேன்.  

ஒரு கறி கூட்டான கதைன்னு பேர் வைக்கப் பார்த்தேன். ஆனா கிட்டத்தட்ட அந்தப் பேர்ல "சொல்ல மறந்த கதை" ன்னு ஒரு அழுமூஞ்சி படத்தை சேரன் எடுத்துட்டார்.
சரி, நம்ப 'நச்' ன்னு "கறியுடன் நான்" னு பேர் வைக்கலாம்னு பாத்தா ஜெயா டி வீ ல "ஹரியுடன் நான்" னு ஒரு நிகழ்ச்சி ஜனரஞ்சகமா ஓடிண்டிருக்கு.
"
 ஒரு நூல்கோல் கூட்டாகிக்கொண்டிருக்கிறது" ன்னு பேர் வெச்சா புஷ்பா தங்கதுரை கோபிப்பாரோ என்னவோ.  
சரி கட்டுரையின் கருவுக்கு ஏத்தாமாதிரி பேர் வெச்சுட்டா ஜெத்மலானி கிட்ட போக வேண்டிய அவசியம் இருக்காதுன்னு "ஒரு கறி கூட்டாகிறது" ன்னு தலைப்பு குடுத்துட்டேன்.  இது கூட " ஒரு ஓடை நதியாகிறது" மாதிரி இருக்கோ?  (டைரக்டர் ஸ்ரீதர் படம்.  என்னோட most favorite தமிழ்ப் படஇயக்குனர். ( http://www.youtube.com/watch?v=Uatd7Z9i1jI) எனக்குப்பிடித்த "தலையைக் குனியும் தாமரையே" (ஜேம்ஸ் வசந்தனின் சமீபத்திய வெற்றிப் பாடல் - "கண்கள் இரண்டால்" (http://www.youtube.com/watch?v=3Y8jQoI-VvI) கூட இதே ராகம்தான் - ரீதி கொவுளை) பாட்டு இடம் பெற்ற படம். இனிமே வேற தலைப்பை யோசிக்கப் போறதில்லை.  

நான் முனைந்து சமைக்க வேண்டுமானால் மனதிற்கு பிடித்த பாடல்களைப் பாடிக்கொண்டேதான் சமைப்பேன்.இன்று முதல் முதலில் நினைவுக்கு வந்த பாடல் " நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்(http://www.youtube.com/watch?v=0bk_0PYlJ58)".  
ஏதேனும் சைவ சமையல் பாட்டு பாடலாம்னு பாத்தா ஒண்ணும் நினைவுக்கு வரலை.  "கல்யாண சமையல் சாதம்" மாயா பஜார் (http://www.youtube.com/watch?v=tDBEDNyhbSc&feature=related) பாட்டு தெரியும்.  அது விவாஹ சமையல், என்னோடதோ விவகாரமான சமையல் - அந்த பாட்டு சரிவராது.
உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு - முதல்வன் (http://www.youtube.com/watch?v=nWCq-QeZCJg) நல்ல ரிதம்..நமக்கு கருவாடு மணக்காது.
வித்யா சாகர் - எனக்கு பிடிச்ச இசை அமைப்பாளர் போட்ட இசைல  பா ஒரு பாடல் - அள்ளித்தந்த வானம் -இந்தப் படத்தில் வர வேண்டிய பாடல் ஆனால் வரவில்லை- (பாடலை இணைத்துள்ளேன்) - "ஒரப்பா கொழம்பு வெச்சு ஊரித்தான் திங்கயிலே" ன்னு ஒரு வரி தான் வரும்.  
http://www.youtube.com/watch?v=GwlGH-prXmc&feature=related இந்தப்பாடலோட படப்பிடிப்பு (விஷுவல்?) அப்பளாம் இடுதல், வடை செய்வதை நினைவுக்குக் கொண்டு வரும். மதுபாலாவையும், ஏ ஆர் ரெஹ்மானையும் தாண்டி கவனிக்க வைத்த இயல்பான விஷுவல். 
மேற் சொன்ன எல்லா பாடல்களையும் பாடிக்கொண்டே வெங்காயம் நறுக்குதல், தக்காளி வெட்டுதல், பச்சை மிளகாய் அரிதல், பூண்டு உரித்தல் முதலானவற்றை முடித்துக்கொண்டேன்.  அடுப்பில் ஹேமா சாதம் வடிக்கச் சொல்லிக்கொடுத்த உத்தியையே பருப்பு வேக வைக்கவும் கையாண்டேன்.  இது மசூர் Dhall (மைசூர் dhall, ஆரஞ்சு பருப்பு என்றும் சொல்வதாகக் கேள்வி).  ஆகவே சுலபத்தில் வெந்து விடுகிறது. இந்த பருப்பைத்தான் நான் சாம்பார் வைக்கவும், Dhall Fry (மும்பாய் வாசம் 8 வருட பாதிப்பு) செய்யவும் பயன் படுத்துகிறேன்.  இன்றைய மெனு உங்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லயே!  இது தான் இன்று நான் செய்யப்போகும் சமையல்:
·  கீரை மசியல் (இந்துருவிடம் கற்றது):  ஒரு பாக்கெட் "frozen cream spinach",கடுகு,சீரகம், வத்த மிளகாய்,உளுத்தம் பருப்பு,பெருங்காயம்.,நானாக சேர்த்துக்கொண்டது தக்காளி, மஞ்சப்பொடி.
·  Carrot, பட்டாணி - கலவைக் காய்கறிகள் கறி.
·  Dhall Fry (வெரும் 'பருப்பு' என்று சொல்வதைவிட Dhall Fry ன்னு சொல்லி சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கிறது:-).
·  சாதம்.
இது போதும் என்ற தீர்மானத்துடன் கொத்தமல்லி (லல்லு கொண்டு வந்து என்னுடைய குளிர் பதனப்பெட்டியில் வைத்துச் சென்றது) எடுக்கையிலே அங்கு என்றோ வாங்கிய நூல்கோல் இரண்டும், ஒரு ஆரஞ் நிற குடமிளகாயும் "காளானுக்கு இரையாவதைவிட உனக்கு இரையாகிறேன்" என்று அரைகூவல் விட்டன. இவை இரண்டையும் எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி கடுகு,சீரகம், உளுத்தம் பருப்பு. தாளித்து கறி பண்ண ஆயத்தமானேன்.

சொல்ல மறந்துவிட்டேனே!  இந்த நூல் கோல் படுத்திவிட்டது.  குளிர் பதனப்பெட்டியில்(Freezer) இருந்ததால் கல் போல் ஆகிவிட்டது.  ஆண்களின் பொறுமையின்மைக்கு (சமையலில் மட்டும் தான்)) ஏற்ப அதை அப்படியே "Microwave"ல் வைத்து இளக (Thaw) வைத்தேன்.  அது என் மனம் போல் ஏகத்துக்கு இளகிவிட்டது. அதை சிரமப்பட்டு தோல் சீவினேன். கறி பண்ண ஆரம்பித்தால் குட மிளகாயும் (இந்த ஆரஞ்சு குடமிளகாய் அமெரிக்காவில் கொஞ்சம் விலை அதிகம்), நூல்கோலும் போட்டி போட்டுக்கொண்டு நீர் விட்டுக்கொள்ளத் தொடங்கிவிட்டன.  கறியைப்பார்த்தால் அழகான நிறச்சேர்க்கையுடன் தோற்றமளித்தது.  ஆயினும் சொத சொதப்பாக இருந்தது. நான் செய்யும் கறிகள் எல்லாம் அளவுக்கு மீறி வேகாமல், அந்தந்த காய்கறிகளின் நிறமும், தன்மையும் மாறா வண்ணம் அமைய முயற்சிப்பேன்.  கவலையை மறக்க வேறு சமயலின் தி என்ன என்று பார்க்கலானேன்.  மற்றவை எல்லாம் மனம்போல் அமைந்து விட்டன.  வெந்த பருப்பைப்பார்த்தேன், நீராகிவிட்ட கறியைப்பார்த்தேன்.  கூட்டிக்கழித்துப்பார்த்ததில் இரண்டையும் சேர்த்து கறியைக் கூட்டாக்குவதே உத்தமம் என்று கலந்துவிட்டேன். கூட்டு தயார்!
·  நூல்கோல், ஆரஞ்சு குடமிளகாய் கறிக் கூட்டு
அடுத்த 15 நிமிடங்களுக்கு  "கறி பாதி , கூட்டு பாதி கலந்து செய்த கலவை தான் "என்று ஆளவந்தான் பட பாட்டு ராகத்தில் பாடிக்கொண்டே குளிக்கச்சென்றேன்.

அன்புடன்
குமார் சின்னம்பி